twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊன்றுகோலுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த குஷ்பு: கட்சியினர் பெருமிதம்

    By Shankar
    |

    Kushboo
    இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அவர் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் வந்தார்.

    நடிகை குஷ்புவுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுக்காவிட்டாலும், அவர் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆளும் அதிமுக அரசு திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபதற்காக குஷ்பூ ஊன்றுகோலுடன் வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளப் படபிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில் குஷ்பு கால் இடறி கீழே விழுந்ததில் கால் எழும்பு முறிந்தது.

    இந்த நிலையிலும் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் குஷ்பு வந்ததைப் பார்த்து கட்சியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மகளிர் அணியினர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தனர். பின்னர் ஸ்டாலினுடன் சேர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

    முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    திமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம். அதிமுக அரசின் அராஜகத்தை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தால் என்ன் மாற்றம் எல்லாம் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம், என்றார்.

    English summary
    Actress cum DMK activist Kushboo attended the protest in North Chennai in the morning. Since she has fractured the leg in a shooting, she came to the protest with a walking stick.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X