Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கனகாவிடம் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரும் 'ஆவி' அமுதா
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக இருந்த முத்துக்குமார் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணம் ஆன 15வது நாள் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கடந்த வாரம் பேட்டியளித்தார்.
ஆனால் அவர் காணாமல் போய் 3 ஆண்டுகள் ஆவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் வந்ததால் இவ்வளவு தாமதமாக புகார் தருவதாகவும் கனகா கூறினார்.
இந்த முத்துக்குமாரை தனக்கு அறிமிகம் செய்து வைத்ததுடன், திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்தவரே ஆவி அமுதாதான் என்றும் கனகா கூறினார்.
இந்நிலையில் ஆவி அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக நடிகை கனகா ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அமுதா கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், ஆவி அமுதா தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக வரும் 17ம் தேதிக்குள் கனகா பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.