Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தீபிகா, பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 10 கோடி பரிசு: மூத்த பாஜக நிர்வாகி அறிவிப்பு
சன்டிகர்: தீபிகா மற்றும் இயக்குனர் பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 10 கோடி அளிக்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் அறிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் ராணி பத்மினியை அவமதித்து வரலாற்றை திரித்துள்ளதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
போராட்டங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தீபிகா
தீபிகா, பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று ஹரியானாவை சேர்ந்த பாஜக தலைமை செய்தி ஒருங்கிணைப்பாளர் சுராஜ்பால் அமு தெரிவித்துள்ளார்.
கால்
பத்மாவதி படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் கால்களை ஒடிக்க வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலியிடம் ரூ. 3 கோடி கூட இல்லை. அவருக்கு எப்படி ரூ.300 கோடி கிடைத்தது? மோடிஜி நீங்கள் பேச வேண்டும் என்று அமு கூறியுள்ளார்.
ரூ. 5 கோடி
தீபிகா மற்றும் பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என்று மீரட்டை சேர்ந்த நபர் ஒருவர் முன்பு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக
தீபிகாவின் தலையை வெட்ட பரிசு அறிவித்ததற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமுவுக்கு பாஜக தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரின் அறிவிப்புக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.