Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். யுட்யூப் விருது வேறு கொடுத்துவிட்டது. இதனால் இந்தியத் தமிழனுக்கு கிடைத்த இணையில்லா புகழாரம் இது என்றெல்லாம் தனுஷ் பெருமையாக பேசி வருகிறார்.
ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில், "பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.
ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.