இயக்குனராகும் ரோகிணி: நெல்லை, தூத்துக்குடியில் நடிகர், நடிகைகள் தேர்வு

மகளிர் மட்டும், விருமாண்டி போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் ரோகிணி. மறைந்த நடிகர் ரகுவரனின் முன்னாள் மனைவி. இவர் பம்பரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார்.
இந்த படத்திற்கான நடிகை, நடிகர்கள், இசை கலைஞர்கள் தேர்வு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்தது. செய்துங்கநல்லூர் மகாலெட்சுமி மகாலில் நடந்த தேர்வில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து இயக்குனர் ரோகிணி கூறியதாவது,
பம்பரம் படத்திற்கான நடிகர்கள், நடிகைகள், இசை கலைஞர்கள் தேர்வு நெல்லை, தூத்துக்குடியில் நடத்தினேன். ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். தகுதி, திறமை அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.


Click it and Unblock the Notifications











