Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிரகாஷ் ராஜ் படத்துக்கு தடை கோரி வழக்கு!
பிரகாஷ்ராஜ், நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள பயணம் படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ளது. பிரகாஷ் ராஜே தயாரித்துள்ளார். அழகிய தீயே, மொழி, அபியும் நானும் படங்களைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜும் ராதாமோகனும் இணைந்துள்ள படம் இது.
தீவிரவாதிகள் விமானம் கடத்துவதை கருவாகக் வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழகமெங்கும் நாளை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்துக்கு தடை விதிக்க கோரி மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், "திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் அபியும் நானும் படத்துக்கு என்னிடம் பல்வேறு தேதிகளில் கடனாக ரூ.79.99 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி தரவில்லை. அவர் தயாரிப்பில் வந்துள்ள பயணம் படத்தின் காப்பிரைட் உரிமையை எனக்கு அளிப்பதாகவும் படத்தை திரையிடுவதற்கு முன் எனக்கு அளிக்க வேண்டிய கடன் தொகையை தருவதாகவும் கடந்த 31.3.10-ல் ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் ஒப்பந்தபடி அவர் செயல்படவில்லை. இது தொடர்பான எனது கடிதங்களுக்கும் பதில் தரவில்லை. எனவே பயணம் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.