Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'ஏழைகளின் ரஹ்மான்'...: இசையமைப்பாளரப் பாராட்டிய வைரமுத்து
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற வம்சம் படத்தின் இசையமைப்பாளர் இவர். ரஹ்மானிடம் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். தனியாக படங்கள் செய்தாலும், இப்போதும் ரஹமான் அழைத்தால் அவருக்கு உதவத் தயங்காதவர்.
முதல் முதலில் தாஜ் நூர் இசையமைத்த படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி. இந்தப் படத்தில் இவர் ஒரு பாடல் முழுக்க காமத்துப் பால் அத்தியாயத்தில் இடம்பெறும் குறள்களை வைத்தே ஒரு அட்டகாசமான டூயட் போட்டுள்ளார்.
களவாணி படம் தயாரித்த நஸீரின் அடுத்த படமான எத்தனுக்கும் இவர்தான் இசை.
வம்சம் படத்தில் பாடல் எழுத வைரமுத்துவைத் தொடர்பு கொள்ள முயன்றாராம் தாஜ் நூர். ஆனால் கவிப்பேரரசு கிடைத்தபாடில்லை. ஆனால் வம்சம் வெளியான பிறகு, நாம் சேர்ந்து பணியாற்றலாமே என வைரமுத்துவே அழைத்திருக்கிறார்.
அதன் விளைவு, ஈழத் தமிழர் பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் தாஜ் நூர். நீயே எங்கள் அடையாளம் என்ற இந்த ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்துதான் எழுதியுள்ளார். இசையுடன் அந்தப் பாடல்களைக் கேட்டு மெய் மறந்த கவிஞர், அடுத்து இப்படிச் சொன்னாராம்: "இனிமே நீங்கதான் ஏழைகளின் ரஹ்மான்."