Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'ஏழைகளின் ரஹ்மான்'...: இசையமைப்பாளரப் பாராட்டிய வைரமுத்து
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற வம்சம் படத்தின் இசையமைப்பாளர் இவர். ரஹ்மானிடம் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். தனியாக படங்கள் செய்தாலும், இப்போதும் ரஹமான் அழைத்தால் அவருக்கு உதவத் தயங்காதவர்.
முதல் முதலில் தாஜ் நூர் இசையமைத்த படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி. இந்தப் படத்தில் இவர் ஒரு பாடல் முழுக்க காமத்துப் பால் அத்தியாயத்தில் இடம்பெறும் குறள்களை வைத்தே ஒரு அட்டகாசமான டூயட் போட்டுள்ளார்.
களவாணி படம் தயாரித்த நஸீரின் அடுத்த படமான எத்தனுக்கும் இவர்தான் இசை.
வம்சம் படத்தில் பாடல் எழுத வைரமுத்துவைத் தொடர்பு கொள்ள முயன்றாராம் தாஜ் நூர். ஆனால் கவிப்பேரரசு கிடைத்தபாடில்லை. ஆனால் வம்சம் வெளியான பிறகு, நாம் சேர்ந்து பணியாற்றலாமே என வைரமுத்துவே அழைத்திருக்கிறார்.
அதன் விளைவு, ஈழத் தமிழர் பற்றிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் தாஜ் நூர். நீயே எங்கள் அடையாளம் என்ற இந்த ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்துதான் எழுதியுள்ளார். இசையுடன் அந்தப் பாடல்களைக் கேட்டு மெய் மறந்த கவிஞர், அடுத்து இப்படிச் சொன்னாராம்: "இனிமே நீங்கதான் ஏழைகளின் ரஹ்மான்."