Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி
அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா (தெலுங்கு), ஏக் துஜே கேலியே (இந்தி), நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பி.எஸ்.லோகநாத். கே.பாலசந்தர் இயக்கிய செய்த 55 படங்களுக்கு, இவர் ஒளிப்பதிவு செய்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் ஷாட் வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
பி.எஸ்.லோகநாத், சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று காலை 5.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடலுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பார்த்திபன், டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அவருடைய உடல் மாலை 5.30 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த பி.எஸ்.லோகநாத்துக்கு ராதா என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர்.