Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விக்ரமின் கருடாவுக்காக 100 ஏக்கரில் பிரமாண்ட செட்!
விக்ரம் நடிக்கும் புதிய படமான கருடாவுக்காக சென்னைக்கு அருகே 100 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைத்துள்ளனர்.
‘இருமுகன்' படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் ‘கருடா'. இப்படத்தை ‘சமர்', ‘நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மகேஷ் மஞ்ச்ரேக்கர்
மேலும், வில்லனாக மகேஷ் மஞ்ச்ரேக்கர் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கவிருக்கிறார். இவர் இந்தியில் பிரபல இயக்குனராகவும் வலம் வருகிறார். ‘குருஷேத்ரா', ‘நிடான்', ‘பிதா' உள்ளிட்ட 23 படங்களை இவர் இயக்கியுள்ளார். ‘ஸ்லம் டாக் மில்லியனர்', ‘ரெடி' தமிழில் ‘ஆரம்பம்' படத்திலும் நடித்து இருக்கிறார்.
படப்பிடிப்பு
இவருடன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், கருணாஸும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக ஏப்ரல் 1-ந் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க இருக்கின்றனர்.
100 ஏக்கரில்
இப்படத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது.
ஆக்ஷன் படம்
பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. கிரிநந்த் இசையமைக்கும் இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் லைன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.