twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பேரை மாத்து...': விக்ரம் வீடு ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது

    By Shankar
    |

    Deiva Thirumagan Movie
    தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக் கோரி நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையில் திருவான்மியூரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    'மாத்து மாத்து தேவரய்யாவை இழிவுபடுத்து பேரை மாத்து' என அவர்கள் கோஷமிட்டபடி வீட்டை முற்றுகையிட முனைந்தனர்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நத 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நல்ல முடிவு வரும்...

    இதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த நடிகர் விக்ரம், "இதுபற்றி நான் கருத்து சொல்லி அவர்களின் கோபத்தை கிளற விரும்பவில்லை. இந்தப் பட பெயர் யாரையும் இழிவுபடுத்தாது. பெருமைதான் சேர்க்கும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி நல்ல முடிவு எட்டப்படும்", என்றார்.

    English summary
    Chennai Police has arrested about 100 persons when they stages a protest in front of Actor Vikram's house to change the title of his forthcoming flick Theiva Thirumagan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X