Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கமல் படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம்... கிரேன் விபத்துக்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்கள்
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்கு இதுதான் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கமல் நடிக்கும் 'இந்தியன்' படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுன் தினம் இரவு விபத்து ஏற்பட்டது.
நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ராட்ச கிரேன் கீழே விழுந்தது.
நூலிழையில்
இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மதுசூதனன் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த நடிகர், கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, இந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினேன்.
காஜல் அகர்வால்
இரண்டு அடி முன்னால் சென்றிருந்தால் நானும் இறந்திருக்கக் கூடும். என்னைப் போல படத்தின் இயக்குனரும் கதாநாயகியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று கூறியிருந்தார். நடிகை காஜல் அகர்வாலும் கூறியிருந்தார். பயங்கரமான இந்த கிரேன் விபத்தால் அதிர்ச்சியில் இருக்கிறேன். நான் உயிரோடு இருந்து இந்த பதிவை வெளியிட ஒரு நொடி மட்டுமே ஆனது. நேரம் மற்றும் உயிரின் மதிப்பு பற்றி கற்றுக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.
தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சீரியசான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து பற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணம் என்ன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நூறு அடி கிரேன்
கமலின் 'இந்தியன் 2' படத்துக்கு நூறடி உயரமுள்ள கிரேனை பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் 40 அடி 60 அடி உயரமுள்ள கிரேனை பயன்படுத்த தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். ஆனால், இங்கு பயன்படுத்தப்பட்டது அதிகமான உயரமான கிரேன். தளம் பலவீனமாக இருந்தால் கிரேனை தாங்கும் சக்தி இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர்.