Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தனுஷ் பங்கேற்ற விழாவில் படம் துவங்கியதுமே வெளிநடப்பு செய்த 100 பேர்
Recommended Video
கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு படத்தை திரையிட்டபோது 100 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் திரையிடப்பட்டது.
பிரபலங்கள்
திங்கட்கிழமை இரவு திரையிடப்பட்ட தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்.
ஜாக்
தொடர் கொலை செய்யும் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் மேட் தில்லன் நடித்துள்ளார். அவர் 2 குழந்தைகளின் தலையில் சுட்டுக் கொன்ற காட்சியை பார்த்ததுமே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து நடையை கட்டிவிட்டனர்.
கொடூரம்
சின்ன குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று அவர்களின் உடல்களை சிதைப்பதை காட்டும் இது எல்லாம் ஒரு படமா. பார்த்தாலே கொடூரமாக உள்ளது என்று பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
இது அல்ல
குழந்தைகள், பெண்களை கொலை செய்வதற்கு பெயர் படமும் இல்லை கலையும் இல்லை. அந்த கொடூரத்தை பார்க்க முடியவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது என்று வெளிநடப்பு செய்தவர்கள் கூறியுள்ளனர்.
பாராட்டு
கடைசி காட்சி வரை இருந்து பார்த்துவிட்டு வந்தவர்களோ படம் அருமையாக உள்ளது. திறமையாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்று பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.