Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக 10000 விநியோகஸ்தர்கள்! - நடிகர் ஆர்.கே அதிரடி
தமிழ் சினிமா விநியோகத்தில் தனது வைகை எக்ஸ்பிரஸ் படம் பெரிய புரட்சியை உண்டாக்கும் என்று நடி ஆர்கே தெரிவித்தார்.
மக்கள் பாசறை வழங்கும், நடிகர் ஆர்.கே. நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'வைகை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.கே., நடிகை நீது சந்திரா, கோமல் சர்மா, காமெடி டைம் அர்ச்சனா மற்றும் படத்தின் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவுமான வி. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆர்.கே பேசுகையில், பத்திரிகையாளர்களிடம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார். நடிகர் ஆர்.கே, அவரது அடுத்த படத்தின் பெயர் "பைரவா" என்றும் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர் ஒருவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என்றும் அத்துடன் இதுவரை நடிகர் ஆர்.கே மலையாள இயக்குனரான ஷாஜி கைலாஷ் அவர்களுடன் மட்டுமே பணியாற்றுகிறார் என்ற பெயர் தமிழ்த் திரையுலகில் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த திரைப்படம் அமையும், இப்படம் குழந்தைகளை வெகுவாக கவரும் வகையிலான கதையம்சத்தை கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி, வைகை எக்ஸ்பிரஸ் தமிழ்த் திரையுலகின் வியாபார முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
"படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்ய சிந்திக்காமல் தியேட்டருக்கு ஆள் வரவில்லை என்கிறோம். இது என்ன நியாயம்?
ஏர்செல், ஏர்டெல் என செல்போனுக்கு எல்லா நெட் ஒர்க் சிம் கார்டும் எங்கும் எளிதில் கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்கு கடை விற்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஏன் சினிமாவுக்கு இருக்ககூடாது?
பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் இந்த புதிய திட்டம். சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் இப்போது பைனான்சியர் ஆகிவிட்டார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் 10 பேர் இருப்பது ஒரு லட்சமானால் வியாபார முறை மாறும். ஆனால், என்னுடைய 'வைகை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார். அதே போல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும்.
அதே சமயத்தில் விநியோகஸ்தர்கள் ஆயிரம் டிக்கெட் வாங்கினால் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தனியாக நூறு டிக்கெட் கமிஷனாக வழங்கப்படும். இது தமிழ் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும். ஒரு திருட்டு விசிடி விற்கிறவன் அவனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரத்துடன் வீட்டிலேயே சிடியைக் கொடுத்து விட்டு, இது தரமாக இருந்தால் மட்டும் பணம் தருமாறு கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும் போது நாம் ஏன் இதை செய்துகாட்ட முடியாது?
இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளிய செல்வதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. அதே போல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல் நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்.
இதற்காக சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டிவிட்டேன். எனது படத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் வாங்கி வெளியிடவுள்ளேன். இதுவரை பெரிய நடிகர்கர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் தன் படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்க வழிவகை செய்ததில்லை. வீட்டில் அவனுக்கு வெட்டிப்பயல். சினிமா பைத்தியம் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதைச் செய்தே தீருவேன்," என்றார் ஆர்கே.
நிகழ்ச்சியில் வசன கர்த்தா வி.பிரபாகர், நடிகைகள் நீதுசந்திரா, கோமல்சர்மா, அர்ச்சனா ஆகியோரும் பேசினார்கள்.