twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாப்பிள்ளை படத் தயாரிப்பாளரும் சக்சேனா மீது வழக்கு!!

    By Shankar
    |

    சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் ராஜ் சக்சேனா மீது 3 வது வழக்கு பதிவாகியுள்ளது. இன்னொரு பக்கம், வழக்குகளிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்கிறார்கள் சக்சேனாவின் வலது கரங்களாக திகழ்ந்த தம்பிதுரை உள்ளிட்டோர்.

    இந்த முறை புகார் கொடுத்திருப்பவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜெபக்.

    தான் தயாரித்த மாப்பிளஅளை படத்தை சன் பிக்சர்சுக்கு 17 கோடி ரூபாய்க்கு விற்றதாகவும், பின்னர் படம் சரியாக போகவில்லை எனக்கூறி 3.37 கோடிரூபாயை மிரட்டி பறித்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனை பெற்றுக்கொண்ட கோடம்பாக்கம் போலீசார் சக்சேனா மீது மிரட்டல் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே இவர் மீது 2 வழக்குகள் உள்ளன, தற்போது 3வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடும் என்கிறார்கள்.

    தம்பித்துரை முன்ஜாமீன் மனு

    இதற்கிடையே சேலம் திரைப்பட விநியோகஸ்தர் சண்முகவேல் தீராத விளையாட்டுப் பிள்ளை பட வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முகமதுசாதிக், சசிகுமார், தம்பித்துரை ஆகிய 3 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மூவரும் சக்ஸேனாவின் வலது கரங்களாகத் திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Saxena is facing more trouble from film producers who gave the film rights to them. Now Nemichand Jabak, the producer of Danush starrer flop Maappillai has filed a fresh complaint in Kodambakkam police on Saxena.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X