twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா கலைஞர்களுக்கு பிரதிதித்துவம்! - பாரதிராஜா வலியுறுத்தல்

    By Chakra
    |

    Bharathiraja
    சென்னை: மத்திய-மாநில அரசுகளில், சினிமா கலைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும், என்று, இயக்குநர் பாரதி ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 40-ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னையில், வருகிற 23-ந் தேதி, மிகப் பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது.

    இது பற்றி இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், " தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக இந்த விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

    சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சினிமா கலைஞர்களுக்கு மத்திய-மாநில அரசுகளில் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீதர் போன்ற சாதனையாளர்களுக்கு தபால்தலை (ஸ்டாம்பு) வெளியிட வேண்டும்..." என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X