Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விவேக்குக்காக கவுண்டர் சமூகத்திடம் தனுஷ் மன்னிப்பு!
தனுஸ் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் உத்தமபுத்திரன். இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ள விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து மோசமாக கமெண்ட் அடித்துள்ளதாகக் கூறி கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் கோவை மற்றும் சேலம் பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.
இதன் காரணமாக கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் உத்தமபுத்திரன் திரையிடுவதை நிறுத்தி வைக்குமாறு அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தில் விவேக் பேசிய வசனத்துக்காக கவுண்டர் சமூக மக்களிடன் தான் மன்னிப்புக் கோருவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த வசனம் தங்களுக்கே தெரியாமல் இடம்பெற்று விட்டதாகவும், தயவு செய்து படத்தை ஓட விடுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.