Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இயக்குநர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் விக்ரமன்!
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், 1,200-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா இருந்து வருகிறார். துணைத் தலைவராக விக்ரமன் இருந்தார்.
செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக எழிலும் இருக்கிறார்கள்.
இயக்குநர்கள் சங்கத்துக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் விக்ரமன் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அவர், செயலாளர் ஆர்.கே.செல்வமணிக்கு அனுப்பி இருக்கிறார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த வேலை காரணமாகவும் தன் பதவியை ராஜினாமா செய்வதாக, விக்ரமன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே சங்கத்தின் பொருளாளராக இருந்த இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனும் இதே போல திடீரென்று பதவி விலகியது நினைவிருக்கலாம்.
இயக்குநர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய விழா தொடர்பான கருத்து மோதல்களும் இந்த ராஜினாமாக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
Actor Vishal: இவன்லாம் என்ன டைரக்ஷன் பண்ணி கிழிக்கப்போறான்னு நினைக்கிறாங்க.. விஷால் வருத்தம்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்
-
ஷங்கர் மகள் 2வது திருமணம்.. சங்கீதா விஜய் மட்டுமில்லை.. கீர்த்தி சுரேஷும் கலந்திருக்கிறாரே!