Don't Miss!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
பணமோசடி புகார்... நடிகை மீது பைனான்சியர் மான நஷ்ட வழக்கு
ஜெய்சூர்யா, பேரின்பம் உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய்பிரியா (36). சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர், நேரு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஸ்ரீராம் சர்மா (37) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் ஒரு சினிமா பைனான்ஸியர். சாலிகிராமத்தி்ல் இவரது அலுவலகம் உள்ளது.
இவரிடம் ரூ 15 லட்சம் வாங்கியுள்ளாராம் சாய்ப்ரியா. ஆனால் அதைத் தராமல் இழுத்தடித்தாராம். தொடர்ந்து கேட்டதற்கு, தன்னை ஸ்ரீராம் சர்மா ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதாக கூற ஆரம்பி்த்துவிட்டாராம்.
இதுகுறித்து ஸ்ரீராம் சர்மா கூறியதாவது:
"எனக்கு சாய்ப்ரியா என்ற கலைவாணியை நேரடியாக தெரியாது. ஒரு நண்பர் மூலம் அவர் என்னைப் பார்க்க வந்தார். தனக்கு பண நெருக்கடி இருப்பதாகவும், ரூ 25 லட்சம் பணம் வேண்டும் என்றும் கூறினார். அவ்வளவு தர முடியாது என்று கூறிவிட்டேன். பின்னர் நண்பர் உத்தரவாதம் அளித்ததால்,ரூ 15 லட்சத்தை இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுத்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் காதல், கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தோம் என்று கூறுவதெல்லாம் முழுப் பொய்.
நான் பணம் கேட்க ஆரம்பித்ததுமே, அவர் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். இதோ அதோ என்று இழுத்தடித்தவர், ஒரு கட்டத்தில் தர முடியாது என்று கூற ஆரம்பித்துவிட்டார். என்னுடைய பணத்தை முழுவதுமாக ஏமாற்ற நினைத்த அவர் போலீஸாரிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார்.
அவர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இது பொய்யான புகார் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
சாய்ப்ரியாவால் நான் பட்ட வேதனைகளுக்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு போடப் போகிறேன்", என்றார்.