Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணமோசடி புகார்... நடிகை மீது பைனான்சியர் மான நஷ்ட வழக்கு
ஜெய்சூர்யா, பேரின்பம் உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய்பிரியா (36). சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர், நேரு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஸ்ரீராம் சர்மா (37) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் ஒரு சினிமா பைனான்ஸியர். சாலிகிராமத்தி்ல் இவரது அலுவலகம் உள்ளது.
இவரிடம் ரூ 15 லட்சம் வாங்கியுள்ளாராம் சாய்ப்ரியா. ஆனால் அதைத் தராமல் இழுத்தடித்தாராம். தொடர்ந்து கேட்டதற்கு, தன்னை ஸ்ரீராம் சர்மா ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதாக கூற ஆரம்பி்த்துவிட்டாராம்.
இதுகுறித்து ஸ்ரீராம் சர்மா கூறியதாவது:
"எனக்கு சாய்ப்ரியா என்ற கலைவாணியை நேரடியாக தெரியாது. ஒரு நண்பர் மூலம் அவர் என்னைப் பார்க்க வந்தார். தனக்கு பண நெருக்கடி இருப்பதாகவும், ரூ 25 லட்சம் பணம் வேண்டும் என்றும் கூறினார். அவ்வளவு தர முடியாது என்று கூறிவிட்டேன். பின்னர் நண்பர் உத்தரவாதம் அளித்ததால்,ரூ 15 லட்சத்தை இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுத்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் காதல், கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தோம் என்று கூறுவதெல்லாம் முழுப் பொய்.
நான் பணம் கேட்க ஆரம்பித்ததுமே, அவர் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். இதோ அதோ என்று இழுத்தடித்தவர், ஒரு கட்டத்தில் தர முடியாது என்று கூற ஆரம்பித்துவிட்டார். என்னுடைய பணத்தை முழுவதுமாக ஏமாற்ற நினைத்த அவர் போலீஸாரிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார்.
அவர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இது பொய்யான புகார் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
சாய்ப்ரியாவால் நான் பட்ட வேதனைகளுக்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு போடப் போகிறேன்", என்றார்.