Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருப்பதியில் இசை பல்கலைக்கழகம்: இளையராஜா-மோகன்பாபு அறிவிப்பு
சாமி தரிசனம்
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவும், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த இருவரையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனர்.
அங்கு இருவரும் ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் இருவருக்கும் லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதங்களை கோவில் அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கினர்.
பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த இளையராஜாவும், மோகன்பாபுவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
இசை பல்கலைக்கழகம்
இசை பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருந்தது. அதன்படி திருப்பதியில் உள்ள ஸ்ரீவித்யா நிகேதன் பல்கலைக்கழகத்தில் (நடிகர் மோகன்பாபுவுக்கு சொந்தமானது) காலியாக உள்ள இடத்தில் இசைக்கு என்று ஒரு பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும்.
இந்தியாவில் இசைக்கென கல்லூரி மட்டுமே உள்ளது. பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. அந்த குறையை இந்த பல்கலைக்கழகம் தீர்த்து வைக்கும். இந்த இசை பல்கலைக்கழகத்துக்கு இருவரும் சேர்ந்து வேண்டிய உதவிகளை செய்வோம்," என்றனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!