Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருப்பதியில் இசை பல்கலைக்கழகம்: இளையராஜா-மோகன்பாபு அறிவிப்பு
சாமி தரிசனம்
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவும், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த இருவரையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனர்.
அங்கு இருவரும் ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் இருவருக்கும் லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதங்களை கோவில் அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கினர்.
பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த இளையராஜாவும், மோகன்பாபுவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
இசை பல்கலைக்கழகம்
இசை பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருந்தது. அதன்படி திருப்பதியில் உள்ள ஸ்ரீவித்யா நிகேதன் பல்கலைக்கழகத்தில் (நடிகர் மோகன்பாபுவுக்கு சொந்தமானது) காலியாக உள்ள இடத்தில் இசைக்கு என்று ஒரு பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும்.
இந்தியாவில் இசைக்கென கல்லூரி மட்டுமே உள்ளது. பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. அந்த குறையை இந்த பல்கலைக்கழகம் தீர்த்து வைக்கும். இந்த இசை பல்கலைக்கழகத்துக்கு இருவரும் சேர்ந்து வேண்டிய உதவிகளை செய்வோம்," என்றனர்.