Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசி மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!!
திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்த மிஷ்கின், சமீப காலமாக தனது பேட்டிகளில் அனைவரையும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். தனது நந்தலாலா படம் மட்டுமே தமிழின் சிறந்த படம் என்று கூறியுள்ள அவர், இதற்கு முன் இயக்கிய படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களை கீழ்த்தரமான படங்கள் என்றும், இந்த மாதிரி கீழ்த்தரமான படங்களைத்தான் ரசிக்கிறார்கள் மக்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டியொன்றில் உதவி இயக்குநர்களை தரக்குறைவாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உதவி இயக்குநர்கள் சுமார் 50 பேர் நேற்று திரண்டு வந்து சென்னையில் உள்ள இயக்குநர் சங்கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
உதவி டைரக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி அளித்த மிஷ்கின் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக மிஷ்கின், இயக்குநர்கள் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், அதில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. ஆனாலும் மிஷ்கின் நேரடியாக மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றும் உதவி இயக்குநர்கள் எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.