Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் சார்பில் உண்ணாவிரதம்!
கொழும்பில் ஐஃபா (IIFA) விருது வழங்கும் விழா வரும் ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு சிறப்புத் தூதுவர் பொறுப்பை ஏற்றிருப்பவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
தனது போர் குற்றங்களை சர்வதேச பார்வையிலிருந்து மறைக்க இலங்கை செய்யும் முயற்சி இது என்றும், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுறும் தருணத்தில் தமிழரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இலங்கையின் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு இந்திய கலைஞர்கள் துணை போகக் கூடாது என்றும் தமிழ் அமைப்புகள் கூறி வருகின்றன.
ஏற்கனவே நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அமிதாப் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு அமிதாப் செல்லமாட்டார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, 'இந்த விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐஃபா விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்த மாட்டோம் என அறிவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!