Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் சார்பில் உண்ணாவிரதம்!
கொழும்பில் ஐஃபா (IIFA) விருது வழங்கும் விழா வரும் ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு சிறப்புத் தூதுவர் பொறுப்பை ஏற்றிருப்பவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
தனது போர் குற்றங்களை சர்வதேச பார்வையிலிருந்து மறைக்க இலங்கை செய்யும் முயற்சி இது என்றும், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுறும் தருணத்தில் தமிழரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இலங்கையின் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு இந்திய கலைஞர்கள் துணை போகக் கூடாது என்றும் தமிழ் அமைப்புகள் கூறி வருகின்றன.
ஏற்கனவே நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அமிதாப் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு அமிதாப் செல்லமாட்டார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, 'இந்த விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐஃபா விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்த மாட்டோம் என அறிவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளது.