Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வழங்கப்பட்டது சம்மன்... ஆஜராவார்களா நயன் - பிரபுதேவா?
பிரபுதேவாவும் -நயன் தாராவும் திருமணத்துக்கு தயாராகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபுதேவா மனைவி ரமலத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நயன், பிரபுதேவாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பிரபுதேவா தற்போது மும்பையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரது சம்மனை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபுதேவாவின் தந்தையும், டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
நயன்தாரா வீடு கேரளாவில் உள்ளது. அவரது சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது.
அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இருவரும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையில், தன்னை மனைவி அல்ல என்று பிரபு தேவா மறுக்கக் கூடும் என்பதால், திருமணத்துக்கான ஆதாரங்கள் மற்றும் நயன்தாராவும் பிரபுதேவாவும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளார் ரம்லத்.