Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தயாரிப்பாளர் சங்கத்திற்கு இன்று தேர்தல்-ஓட்டுப் போட்டார் ரஜினி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன், குஷ்பு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்ரமணியன் மேற்பார்வையில் தேர்தல் தொடங்கியது. திரைப்பட வர்த்தக சபையில் தேர்தல் நடந்தது. மாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது.
தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், அவரது மகள் செளந்தர்யா ரஜினி, பார்த்திபன், குஷ்பு, இயக்குநர் கே.பாலச்சந்தர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இரவு 7 மணி வாக்கில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான முடிவு அறிவிக்கப்படுகின்றன.
செயற்குழு உறுப்பினர்களுக்கான முடிவு நாளை வெளியாகும்.
இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் ராம.நாராயணன் தலைமையில் ஒரு குரூப்பும், கேஆர்ஜி தலைமையில் இன்னொரு குரூப்பும் போட்டியிடுகின்றன.
வாக்குப்பதிவின் போது ரகளையில் யாரும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.