Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூபினா அலிக்கு உதவிய வானம் யூனிட்!
ஸ்லம்டாக் மில்லியனேர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் ரூபினா அலி.
மும்பையின் பாந்த்ரா குடிசைப் பகுதியில் இவரது வீடு இருந்தது. சமீபத்தில் நடந்த பெரிய தீ விபத்தில் இவரது குடிசையும் சாம்பலானது. குடிசைக்குள் இருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டாராம் ரூபினா.
தங்களுக்கு அரசு ஏதாவது உதவி வழங்க வேண்டும் நேற்று முழுக்க பாந்த்ரா குடிசைவாசிகள் போராட்டம் நடத்த, அவர்களுடன் இணைந்து குரல் கொடுத்தார் ரூபினாவும்.
இந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பிலிருந்த வானம் பட தயாரிப்பாளரும் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
உடனடியாக ரூபினா அலியை வீனஸ் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்துக்கு வரவழைத்த தயாநிதி, தனது வானம் யூனிட் சார்பில் ரூ 50000 ரொக்கமாக வழங்குவதாக அறிவித்தார். இதனை படத்தின் ஹீரோ சிம்பு அந்த சிறுமிக்கு வழங்கினார்.
இதைக் கண்ட வீனஸ் நிறவன உரிமையாளர் சம்பக் ஜெயின், தனது பங்காக ரூ 21000 ஐ வழங்கினார். வானம் பட ஆடியோவை வீனஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது!