twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

    By Chakra
    |

    IIFA
    கொழும்பு: சர்வதேச இந்தியத் திரைப்பட விழா மூலம் இலங்கை அரசுக்கு ரூ 110 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினையை வெளிப்படையாகப் பேசவே இலங்கை அரசு பயப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

    இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று அவர் பேசியது:

    "திரைப்பட விழா தொடர்பாக அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் பதில் கூற அரசு அஞ்சுகிறது, நடுங்குகின்றது. ஏனெனில், அந்த விழாவை நடத்தியதன் மூலம் 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு பெரிய இழப்பாகும். விரைவில் மீன் டின்கள் வடிவில் இந்த உண்மை வெளிவரக் கூடும்" என்று ரணில் கூறினார்.

    திரைப்பட விழா குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஆளும்கட்சி தரப்பில் கூச்சல் எழுந்தது.

    ரணிலின் குற்றச்சாட்டுகளுக்கு அரசுத் தரப்பில் பதிலே கூறவில்லை. மாறாக, அதுபற்றிப் பேசக்கூடாது என்று சபாநாயகர் தடுக்க முயற்சித்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X