நான் கடவுள்... வழக்கு போட்ட பாலா!

பாலா இயக்கிய 'நான் கடவுள்' படத்தில் ஊனமுற்றோரை இழிவுப்படுத்திய காட்சிகள் இடம் பெற்றதாக கூறி தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பில் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 5வது கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பாலா இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், நான் கடவுள் படம் ஓடி முடிந்து விட்டது. இப்போது அந்த படத்திற்கு தடை கோரிய வழக்கை தொடர்ந்து விசாரிக்க தேவையில்லை. எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சக்திகுமார் விசாரணையை வருகிற 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











