Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி அபேஸ்... நடிகர் மீது புகார்!
சுட்டும் விழி சுடரோ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சுமேஷ். இவர் சென்னை வடபழனி ஆண்டவர் நகர், 6-வது தெருவில் உள்ள சீனிவாசா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். நேற்று மாலை இவரது வீட்டை இளைஞர்கள் சிலர் வக்கீலோடு சென்று முற்றுகையிட்டனர்.
அந்த இளைஞர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆவார்கள். அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக, நடிகர் சுமேசும் அவரது குடும்பத்தினரும், ரூ.1 கோடி வரை பணம் வாங்கினார்கள் என்றும், வேலை வாங்கி கொடுக்காமல் பட்டை நாமம் போட்டு விட்டார்கள் என்றும், புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் நடிகர் சுமேசை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது தந்தையிடம் கேட்டால்தான் இது பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இதையொட்டி அவரை போலீசார் இரவு விடுவித்து விட்டனர்.
சுமேசின் தந்தையிடம் இதுபற்றி விசாரிக்கப்படும் என்றும், விசாரணை முடிந்த பிறகு மேல்நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.