Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சம்பள உயர்வு பிரச்சினை... சினிமா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. அதில் லைட் மேன், நடன கலைஞர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் உள்பட 9 சங்கங்களில், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 7 மாதங்களாக சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள்.
இதுவரை சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே சென்னை 100 அடி சாலையில் உள்ள சம்மேளன அலுவலகம் முன்பு நேற்று காலை சுமார் 200 தொழிலாளர்கள் கூடி, ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
"சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் உடனடியாக பட அதிபர்களுடன் சம்பள உயர்வு பற்றி பேசி முடிக்க வேண்டும் என்றும், அப்படி முடிக்காத பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டும்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
இதுபற்றி வி.சி.குகநாதனிடம் கேட்டபோது, "தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி விரைவில் பேசி முடிக்கப்படும்'' என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.முரளிதரன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு உடன்படாமல், தன்னிச்சையாக தொழிலாளர்கள் சம்பள உயர்வை அறிவித்தால், அது அரசாங்கத்துக்கு எதிராக அமைந்துவிடும். எனவே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது'' என்றார்.