Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
5 ஏக்கர் நிலத்தை மாஜி திமுக எம்.எல்.ஏ. அபகரித்து விட்டதாக குட்டி பத்மினி மகள் புகார்
தனது தாயாருடன் கமிஷனர் ஜே.கே. திரிபாதியை சந்தித்து கீர்த்தனா இந்தப் புகாரைக் கொடுத்தார். கீர்த்தனாவும் ஒரு நடிகைதான் காதலே சுவாசம் என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் சரிவர நடிக்கவில்லை.
கமிஷனரை சந்தித்து கீர்த்தனா கொடுத்த புகாரில்,
எனது தாயார் குட்டி பத்மினி. பிரபல நடிகை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரைப்படத் துறையில் பல வருடம் இருந்துள்ளார். டிவி தொடர்களையும் தயாரித்துள்ளார்.
எனக்கு 2 சகோதரிகள் உள்ளனர். 1994ம் ஆண்டு கும்மிடிபூண்டியில் உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் எனது பாட்டியின் பணத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதில், ஒரு ஏக்கர் நிலம் எனது தாயார் பெயருக்கும், ஒரு ஏக்கர் நிலம் எனது பெயரிலும் மீதமுள்ள நிலம் எனது சகோதரிகள் பெயரிலும் மாற்றப்பட்டது.
இதற்கிடையில், எனது தாயாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளருமான இ.சிவாஜியிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றார். அது வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் ஆகிவிட்டது. எனவே, பணத்தை திரும்ப கேட்டார்.
இதனால், எனது தாயார் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலம் சிவாஜியின் பினாமி பெயருக்கு மாற்றப்பட்டது. பின்னர், ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சிவாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து, நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில், 2006ம் ஆண்டு எனது தாயார் கும்மிடிப்பூண்டி சென்று பார்த்தபோது 5 ஏக்கர் நிலத்தையும் வேலி போட்டு சிவாஜி மடக்கி வைத்திருந்தார். எங்கள் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மாந்தோப்பின் வருமானத்தையும் அவரே அனுபவித்து வந்தார்.
இப்போது, எனது சகோதரி படிப்பிற்காக அந்த நிலம் தேவைப்படுவதால் அந்த நிலத்தை திருப்பிக் கேட்டோம். ஆனால், சிவாஜி எங்களை மிரட்டினார். நீதிமன்றம் செல்லக் கூடாது என்று மிரட்டும் வகையில் அது இருந்தது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 5 கோடி என்று கூறப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கியுள்ள சிவாஜி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்து.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!