Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார் நிறுத்திய தகராறு-சிம்பு வீட்டு வேலைக்காரர் கைது
நடிகர் சிம்புவின் வீட்டின் முன் நடந்த தகராறு தொடர்பாக அவரது வீட்டு வேலைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் இந்தி பிரசார சபா சாலையில் சிம்புவின் வீடு உள்ளது. இந்த வீட்டை ஒட்டியுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிம்புவின் வீட்டு முன்பு ரோட்டில் நிறுத்துவது வழக்கம். இதனால் சிம்பு வீட்டாருக்கும் வாகனம் நிறுத்துபவர்களுக்கும் இடையே பெரும் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த திருமண மண்டபத்தில் நேற்று தொண்டு அமைப்பு ஒன்றின் சார்பில் 'ஆனந்த தீபாவளி' எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்க வந்த ராஜூ மற்றும் ரஞ்சித் இருவரும் சிம்பு வீட்டின் வாசலில் காரை நிறுத்தினர்.
இதற்கு சிம்புவின் வீட்டு வாட்ச்மேன் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே சிம்புவின் வீட்டிலிருந்த முரளி என்ற வேலைக்காரர் ராஜூ மற்றும் ரஞ்சித்தை அடித்து உதைத்தார்.
இது தொடர்பாக ராஜூ மற்றும் ரஞ்சித் இருவரும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சிம்பு வீட்டிலிருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜூ மற்றும் ரஞ்சித் வற்புறுத்தியதையடுத்து முரளியை போலீசார் இன்று கைது செய்தனர்.