Don't Miss!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சிறுமிகள் சித்ரவதை நடிகை-கணவர் முன்ஜாமீன் மனு !
கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் துளசியம்மாள். ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை ரூ. 2000க்கு வாங்கி நடிகை நந்தினியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஒரு சிறுமியையும் இதே போல அனுப்பி வைத்தார்.
அந்த சிறுமிகளை 6 மாதமாக வாட்ச்மேன் சக்கரபாணி, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் பாபு கிருஷ்ணன் வீட்டில் இருந்து 2 சிறுமிகளும் தப்பினர். பொது மக்கள் அவர்களை கெல்லீசில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வாட்ச்மேன் சக்கரபாணியை கைது செய்தனர். இதற்கிடையில், சிறுமிகளை வேலைக்கு அமர்த்தியதாக ஆவாரம்பூ நாயகி நந்தினி மற்றும் அவர் கணவர் பாபு கிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சக்கரபாணியும், முன்ஜாமீன் வழங்கக் கோரி பாபுகிருஷ்ணனும், நடிகை நந்தினியும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஷாஜகான் ஆஜரானார். மனுதாரர்களின் கோரிக்கைக்குப் பின் திங்கட்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.