twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்; வெளிநாடு போகவில்லை''-ஐஸ்வர்யா

    By Shankar
    |

    Aishwarya Rajini
    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். சிகிச்சைக்காகவோ ஓய்வெடுக்கவோ அவர் வெளிநாடு போகவில்லை, என்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார்.

    ரஜினிகாந்த் கடந்த 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு அஜீரண கோளாறு இருப்பதாகவும், உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தார்கள். சிகிச்சைக்குப்பின், அன்று மாலையே அவர் வீடு திரும்பினார்.

    அதன்பிறகு அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கடந்த 4-ந் தேதி அவர் காய்ச்சல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப்பின், அவர் குணம் அடைந்தார்.

    மருத்துவமனையிலிருந்து காளிகாம்பாள் கோவிலுக்கும், பாம்பன் சாமிகள் ஆசிரமத்துக்கும் சென்று, ரஜினிகாந்த் சாமி கும்பிட்டார். பின்னர் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 6.15 மணிக்கு வீடு திரும்பினார்.

    வெளிநாடு போகவில்லை

    இதற்கிடையே ஓய்வு எடுப்பதற்காக ரஜினிகாந்த் அமெரிக்கா வெளிநாட்டுக்கு போக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவின. பிரபல அரசியல் விமர்சகர் இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். தனது வெளிநாட்டுப் பயணத்துக்கான ஆவணங்களையும் ரஜினி தரப்பிலிருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் இந்த தகவல்களை, அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி மறுத்தார்.

    "அப்பா நலமாக இருக்கிறார். அவர் எந்த வெளிநாட்டுக்கும் போகவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்,'' என்று அவர் கூறினார்.

    English summary
    Rajini's elder daughter Aishwarya Rajini denies reports on her father's foreign trip for further treatment and rest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X