Don't Miss!
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகர் குணால் தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தற்கொலை செய்து கொண்டார் குணால். அவர் தற்கொலை செய்த சமயத்தில் அவருடன் இந்தி நடிகை லோவினா பாடியா என்பவர் இருந்தார். குணாலுக்கு அனுராதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால், குணாலுக்கும், லோவினாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், திருமணம் செய்யுமாறு லோவினா கொடுத்த நெருக்கடியாலேயே குணால் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, நடிகை லோவினா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மும்பை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடிகை லோவினா வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், "சம்பவம் நடந்த அன்று குணால் வீட்டுக்கு நானும், எனது ஆடை வடிவமைப்பாளரும் சென்றிருந்தோம். ஆடை வடிவமைப்பாளர் புறப்பட்ட பிறகு, இரவு 9 மணி அளவில் நான் பாத்ரூமுக்கு சென்றேன். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தபோது, மேற்கூரையில் குணால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததால், தீர்ப்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று ஒத்தி வைத்தது.