ஷாருக்கான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு

மும்பை பந்த்ரா பகுதியில் ஷாருக்கானின் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ஒரு பாட்டிலை வீசினர். அதில் பாட்டில் சிதறி வெடித்தது.
அதில் பெட்ரோல் நிரப்பி வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாட்டில் விழுந்து வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளி, பாட்டிலை வீசிய நபர்களைத் தேடியுள்ளார். ஆனால் யாரும் அகப்படவில்லை.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 மர்ம நபர்கள் வந்து பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. பாட்டிலை வீசிய விஷமிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications