Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 11 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
உக்ரமாகும் கொரோனா.. செத்துமடியும் மக்கள்.. அமெரிக்கா, பிரேசில் இங்கிலாந்து, ஜெர்மனியில் ஷாக்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'நயன்தாராவுக்கு ஒரு நியாயம்... நிகிதாவுக்கு ஒரு நியாயமா?'
கன்னட நடிகர் தர்ஷன் குடும்பப் பிரச்சினைக்கு காரணம் என்று கூறி நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்திருப்பது, திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் சந்தேகத்தின் பேரில் நிகிதாவுக்கு தடை விதித்தது சரி என்றால், உண்மையிலேயே ஒரு குடும்பத்தைக் கெடுத்து, ஒரு பெண் விவாகரத்தும் பெறும் அளவுக்குப் போகக் காரணமாக இருந்த நயன்தாராவை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பலரும்.
தெலுங்கு நடிகர்கள் பலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னட திரையுலகினரின் முடிவு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளனர் (நிகிதா தெலுங்கில்தான் அதிகப்படங்கள் நடித்துள்ளார்).
தமிழகத்திலும் நிகிதா விவகாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகை நிகிதாவுக்கு அங்கு உள்ள தயாரிப்பாளர் சங்கம் 3 வருடம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.
இதுபோன்ற தண்டனைகள் நடிகர், நடிகைகள் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்தை பின்பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பிரபுதேவா வாழ்க்கையில் நடிகை நயன்தாரா குறுக்கிட்டார். இதனால் ரம்லத் வாழ்க்கையை இழந்தார். நயன்தாராவுக்கும் இதுபோல் தடை விதித்து இருக்கவேண்டும். ஆனால் இங்கு அதை செய்ய தவறி விட்டனர். எனவே கன்னட தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நடவடிக்கைகளை தமிழகத்திலும் அமல்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "கன்னட சினிமாவினர் எடுத்த முடிவு அங்கு மட்டும்தான் பொருந்தும். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு. அதில் நாம் தலையிட முடியாது," என்றார்.