Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆபாசப் பேச்சு - நடிகை புகார்
கானல் நீர் படத்தில் நடித்தவர் சேத்னா. இதுதவிர சில கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார். தற்போது ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
போரூரை அடுத்துள்ள முகலிவாக்கத்தில் வசித்து வரும் சேத்னை, சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் பாலசுப்ரமணியத்திடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், நான் போரூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அதற்கு அட்வான்ஸாக ரூ.75 ஆயிரம் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் என்னை காலி செய்யும்படி கூறினார். ஆனால் அவர் முன் பணத்தை தர மறுத்ததால் நான் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் எனக்கு ஒரு மர்ம போன் வருகிறது. அதில் பேசும் வாலிபர், நீ அழகாக இருக்கிறாய், உனது புகைப்படம் பார்த்தேன். காரில் கடத்திச் ெசல்லப் போகிறேன் என்பது உள்பட ஆபாசமாக பேசி வருகிறார்.
எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து மாங்காடு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு சேத்னாவை, இணை ஆணையர் அறிவுறுத்தினார்.