Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சர்வதேச திரைப்பட விழா நடத்த ரூ.25 லட்சம்-ஜெயலலிதா வழங்கினார்
ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில், 140 திரைப்படங்கள், ஒன்பது நாட்களில், ஐந்து தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளன.
9 ஆம் ஆண்டு திரைப்பட விழா
இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம், 2003ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாக, "சென்னை சர்வதேச திரைப்பட விழா' என்ற பெயரில் டிசம்பர் மாதம் விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் செலவுகளுக்காக, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார்.
அப்போது, திரைப்பட நடிகர் சரத்குமார், நடிகை சுகாசினி, நடிகை லிசி ஆகியோர் உடனிருந்தனர். திரைப்பட விழாவை தலைமை வகித்து நடத்தித் தருமாறு, முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.