Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சக்தி சிதம்பரம் மீது ரூ 35 லட்சம் மோசடி வழக்கு
குரு - சிஷ்யன் படம் வெளியிட்டதில் அவர் செய்த மோசடி இது என மதுரையைச் சேரிந்த பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை, தானப்பமுதலி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
மதுரை, தானப்பமுதலி தெருவில், உதயம் பிக்சர் எனும் பெயரில், திரைப்படங்களை வெளியிட்டு வருகிறேன். சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் சக்தி சிதம்பரம். இவர், "சினிமா பாரடைஸ் எனும் பெயரில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவரும், நானும், சுந்தர் சி நடித்த, "குரு-சிஷ்யன் சினிமாவை மதுரை, ராமநாதபுரத்தில் வெளியிட, 42 லட்சம் ரூபாய் பேசி, கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டோம்.
இதன்படி, 2010 மே மாதம் 1ல், மதுரை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு தியேட்டர்களில் குரு-சிஷ்யன் வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்படி, 35 லட்சத்து 49 ஆயிரத்து 840 ரூபாய் பாக்கியை சக்தி சிதம்பரம் தர வேண்டும். பணத்தை கொடுக்காமல் தாமதம் செய்தார். 2010 அக்டோபர் 25ல், மதுரை, ராமநாதபுரம் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தில் முறையிட்டேன். எனினும், பணத்தை கொடுக்கவில்லை.
மதுரையில் என்னை சந்தித்த சக்தி சிதம்பரம், சங்கத்தில் புகார் செய்ய வேண்டாம் எனவும், கடனுக்காக நடிகர் விஜய் நடித்த, "காவலன் சினிமாவை தருவதாகவும் கூறினார். பின், காவலன் சினிமாவை எனக்கு தராமலும், கடனை தராமலும் மோசடி செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், 2010 நவ., 12ல் புகார் கூறினேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி, சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, உத்தரவிட்டார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!