Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ருத்ராட்சத்தில் ப்ளாஸ்டிக் தாலி... மீண்டும் சர்ச்சையில் குஷ்பு!
சர்ச்சைக்குரிய ஏதாவதொன்றைச் செய்துவிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்புவதில் பிஎச்டியே வாங்கும் அளவு தேர்ந்தவர் நடிகை குஷ்பு.
சமீபத்தில் பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அவர் அணிய ஆரம்பித்திருக்கிறார். தாலியை புனிதமாகக் கருதும் தமிழ் சமூகத்தில் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குநர் - நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்பு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். கமல்ஹாஸன் உள்ளிட்ட எக்கச்சக்க விஐபிக்கள் பங்கேற்ற இந்த விழாவில் அனைவருக்கும் உறுத்தலாகத் தெரிந்தது, குஷ்புவின் கழுத்தில் பிரமாண்டமாய் தொங்கிய ஒரு ருத்ராட்ச மாலையும் அதில் கோர்க்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.
பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரை முகம் சுழிக்க வைத்தது. திருமணமான பெண்கள் மட்டுமே தாலி அணிவார்கள். அதுவும் தங்கத்தில், ஒரேயொரு முறை. அதை மீண்டும் கழட்டுவதைக் கூட அமங்கலமாகக் கருதுவது தமிழர் மரபு.
ஆனால் திருமணமான பெண்கள் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்ற 'புரட்சிக் கருத்தைக்' கூறி கொந்தளிப்பை உண்டாக்கிய குஷ்பு, இப்போது திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் தாலியை அல்லது அது போன்ற மாடலில் செய்யப்பட்ட மாலைகளை யாரும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம் என்ற இன்னொரு 'புரட்சி'க்கு வித்திட்டுள்ளார்.
இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் குஷ்பு.
இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. முந்தைய பிரச்சினைகளின்போது அவர் வெறும் நடிகையாக மட்டுமே இருந்தார். இப்போது அவர் ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.