Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பையனூர் சினிமா நகரில் வீடு கட்டும் பணி 2-ந் தேதி துவக்கம்! - ராம.நாராயணன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்துக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்தபின், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், நடிகர்-நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் முதல்-அமைச்சர் கலைஞர், 96 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறார்.
அந்த இடத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓட்டுரிமை உள்ள 750 தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10,500 பேருக்கும் வீடுகள் கட்டப்பட உள்ளன.
டிசம்பர் 2-ந் தேதி துவக்கம்
3 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள், 2 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள், ஒரு படுக்கை அறையை கொண்ட வீடுகள் என மூன்று வகையான வீடுகள் கட்டப்பட இருக்கிறது.
இதற்கான பணிகள், அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவை தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் இணைந்து நடத்த இருக்கிறோம். வீடுகள் அனைத்தும் ஒரு ஆண்டு காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.
இதன் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓட்டுரிமை உள்ள எல்லா பட அதிபர்களுக்கும் வீடுகள் கிடைக்கும். தயாரிப்பாளர்கள் வீடு கட்டுவதற்கு யூகோ வங்கி கடன் வழங்குகிறது.
சின்னத்திரை கலைஞர்கள் ஏற்கனவே வீடு கட்ட தொடங்கி விட்டார்கள். நடிகர்-நடிகைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்பை தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிடும்.
இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் இந்திய திரைப்பட உலகுக்கே தமிழ் திரைப்பட உலகம் உதாரணமாக இருக்கும்,'' என்றார்.