மும்பையில் 2-வது மனைவியின் நடனப்பள்ளியைத் திறந்தார் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜும், அவரது 2-வது மனைவியும் சேர்ந்து மும்பையில் நடனப் பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். அதை அவரே திறந்தும் வைத்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது காதல் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது பிரகாஷ் ராஜும், அவரது 2-வது மனைவியான போனி வர்மாவும் சேர்ந்து மும்பையில் நடனப் பள்ளி ஒன்றை துவக்கியுள்ளனர். அந்த பள்ளியை பிரகாஷ்ராஜ் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பாலிவுட் நடிகர்கள் கோவிந்தா, விவேக் ஓபராய், நடிகை நீது சந்திரா, முக்தா கோட்சே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நடனப்பள்ளியின் கிளைகளை விரைவில் சென்னை, ஹைதராபாத் நகரங்களில் திறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு வெளியேறிய பிராகாஷ் ராஜின் முதல் மனைவி லலிதாகுமாரி தற்போது விவகாரத்திற்குப் பிறகு நடிக்கத் துவங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











