Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவில் பிரகாஷ் ராஜ் உயிர் பிழைப்பது போல ராஜசெகர ரெட்டி வர வேண்டும்-விஜய நிர்மலா
எலந்தப் பழம் பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் விஜய நிர்மலா. இவர் ஹைதராபாத்தில் நடந்த பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தூக்குடு படத்தின் 50வது நாள் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. படத்தில் மகேஷ்பாபு தந்தையாக நடித்துள்ள பிரகாஷ்ராஜை வில்லன்கள் அடித்து தூக்கி வீசுவார்கள். காட்டுவாசிகள் அவரை காப்பாற்றுவார்கள். 20 ஆண்டு கோமாவில் இருந்து மீண்டு எதிரிகளை பழி வாங்குவார்.
அதேபோல ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராஜசேகரரெட்டி மீண்டும் உயிரோடு வரமாட்டாரா? என்ற ஆசை எனக்கு எழுந்தது. அவரை ஆந்திர மக்கள் மறக்கவில்லை. அவரின் பல நல்ல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது.
இப்போது ஆந்திரா பல சோதனைகளை சந்தித்து வருகிறது. அதில் இருந்து ஆந்திர மக்களை காப்பாற்ற ராஜசேகரரெட்டி உயிருடன் எழுந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
எனது ஆசை பேராசையாக இருந்தாலும் சினிமாவில் வருவதுபோல அப்படி நடக்கக்கூடாதா? என நினைக்கிறேன் என்றார் விஜய நிர்மலா.
மகேஷ் பாபு பழம் பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் ஆவார். விஜய நிர்மலா, கிருஷ்ணாவின் 2வது மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.