விபச்சாரம் - கைதான புவனேஸ்வரிக்கு நிபந்தனை ஜாமீன்

அடையாரில் உள்ள தனது வீட்டில் வைத்து விபசாரம் செய்ததாதக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புவனேஸ்வரி ஜாமீன் கோரி ஏற்கனவே ஒருமுறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசுத் தரப்பு அப்போது ஆட்சேபனை தெரிவித்ததால் தள்ளுபடியானது. புவனேஸ்வரிக்கு சென்னையில் முகவரி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மறுபடியும் புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் பூபாலன் புவனேஸ்வரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி மறு உத்தரவு வரும் வரை சாஸ்திரி பவன் காவல் நிலையத்தில் ஆஜராகி தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
திரையுலகுக்கும், மீடியாவுக்கும் இடையே பெரும் சண்டை மூளக் காரணமாக இருந்த புவனேஸ்வரி ஜாமீனில் வெளியே வருவதால் புதிய எதி்ர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











