கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு புகார்

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீஜா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கும், பரத்வாஜூக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே எனது கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார்.
திருமணத்தின்போதும், அதன் பிறகும் என இந்நாள் வரை பல கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளோம். அதெல்லாம் போதாது என்று தற்போது ரூ. 1.5 கோடி வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது புகாரின்பேரில் ஸ்ரீஸ் பரத்வாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498 ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











