twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்த மேனேஜர் வழக்கு-வடிவேலுவுக்கு நோட்டீஸ்

    By Staff
    |

    Vadivelu
    சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மேனேஜர் தாக்கப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி நடிகர் வடிவேலு மற்றும் விருகம்பாக்கம் போலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    2007ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உறவினர் இறந்தார். அவரது வீட்டுக்கு எதிரில்தான் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது.

    அப்போது வடிவேலு அலுவலகம் எதிரே விஜயகாந்த்தின் உறவினர்கள், கட்சியினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    அப்போது விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சதீஷ்குமார் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து வடிவேலு, அவரது மகன் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டி அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தக் கோரி சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு நீதிபதி ஜெயபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க கோரி நடிகர் வடிவேலுவுக்கும், விருகம் பாக்கம் போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X