Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜயகாந்த மேனேஜர் வழக்கு-வடிவேலுவுக்கு நோட்டீஸ்
2007ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உறவினர் இறந்தார். அவரது வீட்டுக்கு எதிரில்தான் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது.
அப்போது வடிவேலு அலுவலகம் எதிரே விஜயகாந்த்தின் உறவினர்கள், கட்சியினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சதீஷ்குமார் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து வடிவேலு, அவரது மகன் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டி அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தக் கோரி சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஜெயபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க கோரி நடிகர் வடிவேலுவுக்கும், விருகம் பாக்கம் போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.