Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு
இந்த விழாவில் முக்கிய விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி, மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழ் திரையுலக கூட்டுக்குழு கூட்டம், சென்னையிலுள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. பின்னர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் திரையுலகினருக்கு வீடுகள் கட்ட, சென்னை அருகிலுள்ள பையனூரில் 96 ஏக்கர் இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு 'கலைஞர் நகரம்' என்று திரையுலகினர் பெயர் சூட்டியுள்ளனர். அங்கு வீடுகள் கட்ட, வரும் 22ம் தேதி காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
கே.பாலசந்தர் தலைமை தாங்குகிறார். தாசரி நாராயணராவ், ஏ.வி.எம்.சரவணன் முன்னிலை வகிக்கின்றனர். நான் வரவேற்றுப் பேசுகிறேன். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை, நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர், பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண் பங்கேற்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜித்தேந்திரா, மம்மூட்டி, வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசுகின்றனர்.
முதல்வர் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டு விழா பேருரை ஆற்றுகிறார். பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் நன்றி கூறுகிறார். விழாவில் திரையுலகினர் கலந்துகொள்ள வசதியாக, 22ம் தேதி திரைத்துறை சம்பந்தமான எந்தவொரு வேலையும் மேற்கொள்வது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பையனூரில் 20 ஆயிரம் பேர் உட்காரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. சென்னையில் இருந்து காலை 6 மணியளவில், 200 பஸ்கள், கார்களில் திரையுலகினர் பையனூர் செல்கின்றனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கலைஞர் நகரத்தில் 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. 4 புளோர்கள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோவும் கட்டப்படுகிறது என்றார் ராம நாராயணன்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!